சுன்னாகம், அம்பனை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உறவுப்பகை காரணமாகவே அயலில் உள்ளவரால் இந்த வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாள்வெட்டுக்கு இலக்கான குறித்த நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
வாள்வெட்டினை மேற்கொண்ட சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டுவருகின்றதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment