தனியார் வெற்றுக்காணியில் மோட்டார் குண்டு மீட்பு

 திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ வடக்குப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வெற்றுக் காணியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தம்பலகாமம் விசேட பொலிஸ் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மோட்டார் குண்டுகள்  இன்று (06) மீட்கப்பட்டுள்ளது.


கந்தளாய் நீதிமன்ற நீதவானின் அனுமதியின் பின் குறித்த மோட்டார் குண்டை செயலிழக்க வைப்பது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவ இடத்தில் தற்போது மோட்டார் குண்டு பொலிஸ் பாதுகாப்புடன் இருக்கின்றது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




Post a Comment

0 Comments

Copyrights © Today Yarl News - Today Yarl News |Tamil News Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News